Seletar Expressway சாலை விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனில்லாமல் மரணம்

Seletar Expressway accident dies
Photo: Shin Min Daily News

Seletar Expressway: சிலேத்தர் விரைவுச்சாலையில் (SLE) ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை, புக்கிட் திமா விரைவுச்சாலையை நோக்கி செல்லும் வழியில் லென்டர் அவென்யூ வெளியேறும் இடத்திற்கு அருகில் நடந்தது.

கார் மோதி கருஞ்சிறுத்தை மரணம் – வீடியோ பார்த்து நெட்டிசன்கள் கவலை

மேலும் காலை 10.20 மணியளவில் இந்த விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

இதில் மயக்க நிலையில் இருந்த 36 வயதுமிக்க பெண் மற்றும் இன்னொருவரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்கள்… Work pass வேலை குளறுபடி – 27 பேர் அதிரடி கைது