சிங்கப்பூரில் அடுத்த மாதம் செப்டம்பர் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1-ம் தேதி சிங்கப்பூரில் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆர்ச்சர்ட் சாலை கலகம்: ஒருவர் மீது கொலை குற்றச்சாட்டு
இதன் காரணமாக செப்., 1ம் தேதி பொது விடுமுறை நாள் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று ஆக., 22ல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
இது வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறையில் ஊழியர் வேலை செய்ய வேண்டியிருந்தால், அந்த ஊழியருக்கு அன்றைய நாளுக்கான கூடுதல் சம்பளம் அளிக்கப்பட வேண்டும் அல்லது ஒரு நாள் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று MOM கூறியுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்