சிங்கப்பூரில் 4 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தொற்று குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதோடு சேர்த்து, மொத்தம் 8 குழுமங்களை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கொரோனாவால் புதிதாக மூன்று உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 133ஆக உயர்வு
மேலும் நேற்றைய (அக். 6) நிலவரப்படி, அமைச்சகத்தின் பட்டியலில் புதிய குழுமங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
நான்கு தங்கும் விடுதிகள்:
- ASPRI-Westlite Papan தங்கும் விடுதி
- Tampines தங்கும் விடுதி
- ஜூரோங் பெஞ்சுரு தங்கும் விடுதி 1
- 9 Defu South Street 1ல் உள்ள தங்கும் விடுதி
சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, தங்கும் விடுதிகளில் உள்ள 630 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
196 நோய்த்தொற்று பாதிப்புகளுடன், ASPRI-Westlite Papan விடுதி பெரிய குழுமமாக உள்ளது, நேற்று 29 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
உள்-விடுதி பரிமாற்றம்
அனைத்து தங்கும் விடுதி குழுமங்களிலும் விடுதிகளுக்கு அப்பால் தொற்று பரவியதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என MOH குறிப்பிட்டது.
மேலும், குடியிருப்பாளர்களிடையே உள்-விடுதி பரிமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் MOH தெரிவித்துள்ளது.
மனக் கவலையைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை