கொரோனாவால் புதிதாக மூன்று உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 133ஆக உயர்வு

Google Maps

சிங்கப்பூரில் நேற்றைய (அக்டோபர் 6) நிலவரப்படி, புதிதாக 3,577 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனாவால் புதிதாக மூன்று உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

மனக் கவலையைத் தவிர, வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை

அவர்கள் 68 முதல் 102 வயதுக்குட்பட்ட சிங்கப்பூர் பெண்கள் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மூன்று பேரும் COVID-19க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன என்றும் அது தெரிவித்துள்ளது.

இதன்மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உடல்நல ஆரோக்கியம் போலவே “மனநல ஆரோக்கியம்” முக்கியம்