MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம் இணையத்தில் வைரல் – ஏன் இவ்வாறு செய்தார்? என நெட்டிசன்கள் கேள்வி

Stomp

MRT ரயிலில் பெண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

அவர் தனது கீழ்ஆடையை இறக்கிவிட்டு கீழே குந்தி சிறுநீர் கழித்ததாக சொல்ல்லப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் பரவியது.

வெளிநாட்டு ஊழியர்களால் சிங்கப்பூருக்கு வளர்ச்சி… ஊழியர்களை நம்பியுள்ள சிங்கப்பூர் மக்கள்

இந்தச் சம்பவம், ஜூரோங் ஈஸ்ட் MRT ரயில் நிலையத்தை நோக்கி பயணித்த, வடக்கு-தெற்கு பாதையில் கடந்த ஆக.29 ஆம் தேதி நள்ளிரவு 12.35 மணியளவில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீர் ரயில் பெட்டியில் முன்னோக்கி ஓடியதும், அதை கண்ட பயணி எழுந்து ஓடியதும் காட்சிகள் வழி காண முடிந்தது.

இது குற்றமாகும், முதல் தடவை செய்யும் குற்றத்திற்கு S$1,000 வரை அபராதமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றங்களுக்கு முறையே S$2,000 மற்றும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

லாரி மோதி ஊழியர் மரணம்: போதையில் லாரி ஓட்டிய டிரைவர் கைது