சிங்கப்பூரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை; 24 ஆடவர்கள் கைது

sg police raid 29 arrested suspected

சிங்கப்பூரில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதில் 32 முதல் 75 வயதுக்குட்பட்ட மொத்தம் 24 ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர் என போலீசார் தெரிவித்தனர்.

பிரபல நர்சரியில் ஏற்பட்ட தீ: பரிதாபமாக உயிரிழந்த பறவைகள்

சட்டவிரோதமான முறையில் தொலைதூரத்தில் இருந்து சூதாட்ட சேவைகளை வழங்கிய சந்தேகத்தின் காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுமார் $730,000 பெறுமதியான பணம் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. அதாவது கணினிகள் மற்றும் கைப்பேசிகள் அதில் அடங்கும்.

அத்துடன் சூதாட்டம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

ரெட்ஹில், புக்கித் பாத்தோக், ஹௌகாங், ஜூரோங் வெஸ்ட், டெபான் கார்டன்ஸ் மற்றும் தெம்பனீஸ் உள்ளிட்ட தீவு முழுவதும் பல இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.

‘சென்னை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிரடி அறிவிப்பு!