சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் Scoot விமான சேவைகளில் மொத்தம் 1,452,500 பயணிகள் கடந்த ஏப்ரலில் மட்டும் பயணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
கடந்த மாத தொடக்கத்தில் VTL ஏற்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து, இந்த பயணிகளின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரித்துள்ளது.
முதலாளிகளுக்கு டாடா காட்ட தயாராகும் பணியாளர்கள்: 3 பேரில் ஒருவர் சொல்லும் அதிர்ச்சி காரணம்!
SIA நிறுவனத்தால் நேற்று செவ்வாயன்று (மே 17) வெளியிடப்பட்ட இந்த பயண விவரங்களில் அந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இரண்டு விமான நிறுவனங்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 1,216 சதவீதம் அதிக பயணிகளைக் கையாண்டதாக கூறுகின்றன.
இந்த ஆண்டு 2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 62.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் விமானப் பயணத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்தது.
பயணிகள் தனிமைப்படுத்தப்படாமலும், வருகையின்போது கோவிட்-19 சோதனை ஏதும் இல்லாமலும் நாட்டிற்குள் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் குடியிருப்புகளில் அதிக தொந்தரவு செய்யும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க எளிய வழிமுறைகள்..!