சிங்கப்பூரில் புதிதாக 766 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (03/12/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (03/12/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 766 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 749 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 738 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 11 பேருக்கும் பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,67,916 ஆக உயர்ந்துள்ளது.

இழுவைப் படகில் வரிச் செலுத்தப்படாத சிகரெட்டுகள்…சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

கொரோனாவால் மேலும் 9 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 67 முதல் 98 வயத்துக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 744 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 931 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 183 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 63 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் சிலரின் உடல்நிலைக் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

‘Braddell Hill’ அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

கடந்த நாளில் 1,393 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 215 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.