விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வெளிநாட்டவருக்கு கடும் எச்சரிக்கை

SIA apologises
SIA

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த 37 வயது பயணிக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் செப். 28 ஆம் தேதி அன்று அமெரிக்காவை சேர்ந்த லா அண்டி ஹியன் டுக் என்ற ஆடவர் விமான கேபின் பணியாளர்களைத் தாக்கியதாகவும், தனது பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி மிரட்டியதாகவும் போலீசார் கைது செய்தனர்.

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் SQ33 விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டதாக MINDEF தெரிவித்தது.

இந்நிலையில், அந்த ஆடவருக்கு மனநோய் பாதிப்பு இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் மீண்டும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது