சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்ல வேண்டிய விமானம் ரத்து!

Photo: IndiGO Official Twitter Page

 

சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் ரத்துச் செய்யப்பட்டிருப்பதால், பயணிகள் அவதியடைந்தனர்.

நீரில் கண்டெடுக்கப்பட்ட மேலும் ஒரு ஆடவர் உடல் – போலீஸ் விசாரணை

இன்று (ஆகஸ்ட் 28) காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இயந்திர கோளாறு மற்றும் நிர்வாகச் செயல்பாட்டுக் காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதே விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வரவிருந்தது. அந்த விமான சேவையும் ரத்தானதால், இரு வழித்தடத்திலும் பயணிக்க இருந்த 327 பயணிகள் அவதியடைந்தனர்.

“இந்த நாட்களில் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்”- குடிநுழைவுச் சோதனைச் சாவடி ஆணையம் தகவல்!

இதையடுத்து, ரத்தான இண்டிகோ விமானத்தில் செல்லவிருந்த பயணிகள், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு விமானங்கள் மூலம் சிங்கப்பூருக்கு வந்தனர்.