இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிங்கப்பூர் நிதியமைச்சருடன் சந்திப்பு!

Photo: High Commission of India in Singapore Official Facebook Page

இத்தாலி நாட்டின் தலைநகர் ரோமில் G20 உறுப்பு நாடுகளின் (Group of 20- ‘G20’ Summit in Rome) உச்சி மாநாடு அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, G20- ல் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் கொரியா, துருக்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரோம் நகருக்கு சென்றுள்ளனர்.

G20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்ற பிரதமர் லீ சியன் லூங்!

அந்த வகையில், இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பின் பேரில், சிங்கப்பூரில் இருந்து தனி விமானம் மூலம் G20 உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் இத்தாலி சென்றுள்ளார். பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் மற்றும் முக்கிய அதிகாரிகளும் இத்தாலி சென்றுள்ளனர். நவம்பர் 1- ஆம் தேதி வரை இத்தாலி நாட்டில் நடைபெறும் பல்வேறு கூட்டங்களிலும் பிரதமர் கலந்துக் கொள்கிறார். இவ்வாறு சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Work permit அனுமதி பெற்ற இந்திய ஊழியருக்கு ஒன்பது வார சிறைத்தண்டனை

இந்த நிலையில், G20 உச்சி மாநாட்டையொட்டி, G20 நாடுகளின் நிதியமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் கூட்டம் ரோம் நகரில் இன்று (29/10/2021) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இந்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிங்கப்பூர் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங்- கை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவைக் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.

ரோம் நகரில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் சிங்கப்பூர் அமைச்சர்கள் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், லாரன்ஸ் வோங் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.