கொரோனா: வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் புதிதாக பாதிப்பு..!

COVID-19 cases in Singapore
COVID-19 cases in Singapore (PHOTO: Greg Waldron)

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 05) நிலவரப்படி, 7 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தனது தினசரி புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

சிங்கப்பூரில் 3ஆம் கட்டத் தளர்வு: ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீடிக்கலாம்.

தனிமைப்படுத்தல்

இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சமூக அளவில்

மீதமுள்ள ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்த பாதிப்பு

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,043ஆக உள்ளது.

மேலும் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

மூன்றாம் கட்டம்?

முன்னர், ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் 3ஆம் கட்டத்திற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று (நவம்பர் 4) தெரிவித்தார்.

இந்த 3ஆம் கட்டம் என்பது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பாது என்று பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு கான் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் 139 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் கிருமித்தொற்றால் பாதிப்பு.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…