சிங்கப்பூரில் இன்றைய (ஏப்ரல் 12) மதிய நிலவரப்படி, புதிதாக 25 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இரு மால்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
அவர்கள் சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்கீழ் தனிமையில் வைக்கப்பட்டனர் அல்லது தனிமைப் படுத்தப்பட்டனர் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி அல்லது சமூக அளவில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
சிங்கப்பூரில் இதுவரை இந்த கிருமித்தொற்றால் மொத்தம் 60,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும்.
COVID-19 தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியருக்கு கிருமித்தொற்று!