வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக ஊழியர் ஒருவருக்கு தொற்று – விவரம்

(Photo: MOM)

சிங்கப்பூரில் மூன்று வாரங்களுக்குப் பின், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் உள்ள ஒருவருக்கு நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.

சிறப்பு விமானங்கள் மட்டுமே இந்தியா-சிங்கப்பூர் இடையில் இயக்கப்படுகின்றன – ஒவ்வொரு நாளும் 25 பயணிகள் சிங்கப்பூர் வருகை

46 வயதான மலேசிய ஊழியரான அவர், H&W கம்யூனிகேஷன்ஸில் கட்டுமான ஊழியராக பணிபுரிகிறார்.

அவர் ஹார்வெஸ்ட் @ உட்லேண்ட்ஸில், 280 உட்லேண்ட்ஸ் இன்டஸ்ட்ரியல் பார்க் E5இல் வசிக்கிறார்.

இதற்கு முன் தொற்றால் பாதிக்கப்பட்ட யாருடனும் அவருக்கு தொடர்பு இல்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.