சிங்கப்பூர் ஜூராங் கிழக்கு பகுதியில் உள்ள FairPrice கடைக்கு வெளியே இருந்த பழங்கள் பிரிவில் உள்ள வாழைப்பழங்களில் வௌவால் ஒன்று அமர்ந்து சாப்பிடுவது போல் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
“All Singapore Stuff” என்ற முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், வௌவால் ஒன்று வாழைப்பழங்களில் அமர்ந்து கொண்டு சாப்பிடுவது போல் இருந்தது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றை கட்டுப்படுத்த தேவையான வசதிகளுக்கு S$804 மில்லியன் செலவு..!
இந்து காணொளியின் கீழ், இந்த சம்பவம் ஜுராங் கிழக்கில் உள்ள FairPrice விற்பனை நிலையத்தில் நடந்ததாக காணொளியில் குறிப்பிடப்பட்டுருந்தது. காணொளி வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட பகிர்வுகளை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில முகநூல் பயனர்கள் வௌவாலை பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தாலும், மற்றவர்கள் அதற்கு அனுதாபம் தெரிவித்ததோடு, அதற்கு எந்த தீங்கும் விளைவிக்க வேண்டாம் என்று வலியுறுத்தினர்.
Guess it means these bananas ripe and sweet already. Can buy liao<Reader's Contribution by Lau>
Posted by All Singapore Stuff on Thursday, 15 October 2020
MotherShip-ன் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக Fairprice கூறுகையில், 345 ஜுராங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 31இல் உள்ள 24 மணி நேர FairPrice கடையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்பதையும் உறுதிப்படுத்தியது.
இருப்பினும், இது கடையின் உள்ளே ஏற்படவில்லை என்றும், வெளியில் அமைந்துள்ள பழங்கள் பிரிவில் உள்ள வாழைப்பழங்களில் வௌவால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இதேபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க அவர்கள் எல்லா பழங்களையும் கடையின் உள்ளே நகர்த்தியுள்ளதாக FairPrice தெரிவித்தது.
இப்பகுதியில் வெளவால்கள் இருப்பதற்கான காரணத்தை ஆராய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் FairPrice தெரிவித்தது.
மேலும், நடந்த இந்து சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்பதாக FairPrice தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு தொடக்கம்..!