சிங்கப்பூரில் உள்ள NTUC FairPrice பேரங்காடி அதன் முன்னோடித் தலைமுறையினர் பிரதிநிதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
சமூக அளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் காரணத்தால், மூத்தோர்களை பாதுகாக்க அந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் (ஜூலை 26) முதல் அடுத்த மாதம் இறுதி வரை அந்த திட்டம் நடப்பில் இருக்கும் என்றும், சென்ற ஆண்டு அதிரடி திட்டம் நடப்பில் இருந்தபோது அந்தத் திட்டம் முதன் முறையாக நடப்பிற்கு வந்தது.
ஐந்து வாகனங்கள் மோதி கடும் விபத்து – ஆடவர் ஒருவர் மரணம்
முன்னோடித் தலைமுறையினரின் உறவினர்கள், திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் முன்னோடித் தலைமுறையினரின் அடையாள அட்டையை காட்டிச் சலுகை விலையில் பொருள்களை வாங்கிச் செல்ல முடியும்.
மூத்தோர்களுக்காக பொருள்களை வாங்கித்தர உதவும் குடும்பத்தினருக்கு சிறப்பு சேமிப்பை வழங்க பிரதிநிதித் திட்டம் உதவும் என்றும் FairPrice பேரங்காடி குறிப்பிட்டுள்ளது.
மேலும், அதிகபட்சமாக 200 வெள்ளி வரையிலான பொருட்களுக்கு 3 விழுக்காடு வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும், FairPrice Unity கிளைகளுக்கும் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.