சிங்கப்பூர் மற்றும் மலேசியா இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பயணத்திற்கான ஏற்பாடுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
ஆனால் தினசரி பயணத்தை அனுமதிக்க இன்னும் தயாராக இல்லை என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த பயணி கைது..!
டாக்டர் பாலகிருஷ்ணன், இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) காலை உட்லேண்ட்ஸ் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் செய்தியாளர்களிடம் பேசினார்.
செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர் டாக்டர் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேனும் சந்தித்து பேசினர்.
“இருதரப்புத் தடையற்ற பயணமுறை (Reciprocal Green Lane) ஏற்பாடு, அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடு (Periodic Commuting Arrangement) ஆகியவற்றிற்கு தீர்வு கண்டுள்ளோம். எனவே அனைத்து விவரங்களும் முடிவுசெய்யப்பட்டுள்ளன. (மேலும்) விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் தொடங்கும், அடுத்த சில நாட்களில் விவரங்களை வெளியிடுவோம்” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
எவ்வாறாயினும், இரு நாடுகளும் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான தினசரி பயணத்திற்கு இந்த ஏற்பாடுகள் வழங்கவில்லை என்று அவர் கூறினார்.
“மலேசியா, குறிப்பாக ஜொகூரிலும், சிங்கப்பூரிலும் (COVID-19) புள்ளிவிவரங்களைக் கண்காணிக்க எங்களுக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் கொடுங்கள்.”
“இரு இடங்களிலும் தொற்று கட்டுக்குள் உள்ளது என்று உறுதியாகும்போது, தினசரி பயணத்தை எவ்வாறு அனுமதிக்க முடியும் என்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கலாம்” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
இதையும் படிங்க : ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – NTUC..!