சிங்கப்பூரில் சர்வதேச வெளிநாட்டு ஊழியர்கள் தினம் கொண்டாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
பிளாட் ஒன்றில் தீ விபத்து – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
இந்த தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு ஊழியர்களை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளை மனிதவள அமைச்சகத்தின் கீழ் உள்ள ACE குழு ஏற்பாடு செய்துள்ளதாக “செய்தி” கூறியுள்ளது.
அந்த சிறப்பு விழாவில் மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ கலந்துகொண்டார் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
இதில் தெருசான் பொழுதுபோக்கு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் பங்கேற்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள 500 தங்கும் விடுதிகளில் இதே போல சிறப்பு நிகழ்வுகள் வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Source : Seithi MediaCorp
சிங்கப்பூர் தங்க கட்டிகளை குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறி.. 500 பவுன், ரூ.3 கோடி மோசடி!