சிங்கப்பூரில் தனது கடைசி கடையையும் மூடியுள்ளதாக ‘Milksha’ என்ற உணவுப் பான நிறுவனம் அறிவித்துள்ளது.
2023ன் இறுதி வாரங்களில் குறைந்து காணப்பட்ட மக்கள் நடமாட்டம் – எங்கே போனார்கள்?
இது குறித்து ‘Milksha’ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பப்பில் டீ கடையான (Bubble Tea Store) ‘Milksha’, சிங்கப்பூரில் தெம்பனீஸ் சென்ட்ரல் 1- ல் (10 Tampines Central 1) உள்ள தனது கடைசி விற்பனை நிலையத்தை கடந்த 2023- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி அன்று முதல் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்படுகிறது; அத்துடன் கடையும் மூடப்படுகிறது. எங்கள் கடைக்கு ஆதரவளித்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளது.
தைவானைச் சேர்ந்த ‘Milksha’ கடந்த 2019- ஆம் ஆண்டு சன்டெக் சிட்டியில் (Suntec City) பப்பில் டீ கடையை (Taiwanese Bubble Tea Store) திறந்துள்ளது.
மில்க் ஷேக் உள்ளிட்ட பலவகையான பானங்களை விற்பனை செய்து வந்த நிறுவனம் ‘Milksha’ என்பது குறிப்பிடத்தக்கது.