தமிழ்நாடு அரசின் ‘அயலகத் தமிழர் தினம் 2024’-ல் பங்கேற்பதற்காக, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வந்துள்ள சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம், இன்று (ஜன.11) மாலை 04.00 மணிக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், தமிழ்நாடு இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சிங்கப்பூர் அமைச்சர் கா.சண்முகம் சந்திப்பு!
இந்த சந்திப்பின் போது, சிங்கப்பூர் நாட்டு துணைத் தூதர் எட்கர் பாங்க் (Edgar Pang), உதவி இயக்குநர் ஷான் லிம் யங் சென் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு அரசின் ‘அயலகத் தமிழர் தினம் 2024’-ல் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கும் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகத்தை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து உரையாடினோம்.
சென்னையில் ‘அயலகத் தமிழர் தினம்- 2024’ விழா தொடக்கம்!
தமிழ்நாட்டிற்கும் – சிங்கப்பூருக்கும் இடையே உள்ள நீண்ட நெடிய பண்பாடு மற்றும் கலாச்சார உறவுகளையும் – அவற்றை இன்னும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் பற்றி பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.