சிங்கப்பூரில் உள்ள Springleaf, Bright Hill, Caldecott ஆகிய ரயில் நிலையங்கள் திறக்கப்பட இருப்பதால், அந்த பகுதிகளில் வியாபாரம் அதிகரிக்கும் என அந்த வட்டாரத்திலுள்ள கடைக்காரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அந்த வட்டாரங்களுக்கு செல்வது எளிதானால் அந்த பகுதியில், வர்த்தகம் 20 விழுக்காடு அதிகரிக்கும் என்றும், இதுவரை ஏற்பட்ட நட்டத்தை அடுத்த மாதத்திலிருந்து ஈடு செய்யலாம் என கடைக்காரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரும்போது கடைகளில் வாடகை அதிகரிக்குமோ என்றும் கடைக்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் 2025ம் ஆண்டு Thomson-East Coast ரயில் பாதை முழுமை அடையும்போது, 2,40,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும் என்றும், Thomson-East Coast ரயில் பாதையில் மேலும் 6 நிலையங்கள் அடுத்த மாத இறுதியிலிருந்து செயல்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9.23 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மோசடி: 334 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை!