பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த ஆண்டு மரினா பேயில் வாணவேடிக்கை காட்சி எதுவும் இடம்பெறாது.
இருப்பினும், சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் புத்தாண்டு தினத்தன்று 11 முக்கிய இடங்களில் கண்கவர் வாணவேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.
Circular சாலையில் உள்ள உணவகத்தில் சண்டை…3 பேருக்கு காவல்துறை வலைவீச்சு
மக்கள் கழகம் (PA) ஏற்பாடு செய்த புத்தாண்டு கவுண்டவுன், முதன்முறையாக மெய்நிகர் (virtual) காட்சிகளில் ஒளிபரப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் 3ஆம் கட்டத்தை நெருங்கும் வேளையில், குறிப்பாக பண்டிகை காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று PA தெரிவித்துள்ளது.
வாணவேடிக்கை நடைபெறும் 11 முக்கிய இடங்கள்
- பெடோக்
- பிஷான் (Bishan)
- பூன் லே (Boon Lay)
- கெய்லாங் (Geylang)
- ஹௌகாங் (Hougang)
- ஜுராங்
- தெம்பனீஸ்
- தியோங் பஹ்ரு (Tiong Bahru)
- உட்லேண்ட்ஸ்
- யூ டீ (Yew Tee)
- வெஸ்ட் கோஸ்ட் குழு பிரதிநிதித்துவ தொகுதியில் (GRC) நான்யாங் வார்டு
16 இடங்களில் மெய்நிகர் காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
இதில் குடியிருப்பாளர்கள் புதிய ஆண்டிற்கான தங்கள் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், விளையாட்டுகள் மற்றும் வினாடி வினாக்களில் பங்கேற்கவும், நேரடி நிகழ்ச்சிகளை ரசிக்கவும் முடியும்.
அவை டிசம்பர் 27ஆம் தேதி, பொங்கோல் கோஸ்ட், நீ சூன் சௌத் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி, தெலுக் பிளாங்கா பகுதிகளிலும் நடைபெறும்.
மீதமுள்ள 12 இடங்களில் டிசம்பர் 31 இரவு நடைபெறும்.
யிஷூனில் உள்ள குடியிருப்பில் தீ…6 பேர் மருத்துவமனையில் அனுமதி
சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…