சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக நெகடிவ் COVID-19 சோதனை முடிவு இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களாக இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (செப்டம்பர் 23) தெரிவித்துள்ளது.
PCR சோதனை முடிவுகளை வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும் அல்லது இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புறப்படுவதற்கு முந்தைய சோதனை என்பது, சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர வாசிகள் அல்லாத பயணிகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுழைவு அனுமதிக்கப்பட்ட இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் ஒரு பிரத்யேக வசதியில் 14 நாள் வீட்டில் தாங்கும் கட்டாய அறிவிப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (செப்டம்பர் 23) முதல், இந்த பயணிகள் 14 நாள் காலப்பகுதியில் செரோலஜி (Serological) பரிசோதனையம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்து தனிமைப்படுத்தப்பட்டவரின் மரணம் – நீடிக்கும் மர்மம்..!
செரோலாஜிக்கல் சோதனைகள் ஆன்டிபாடிகளைத் தேடும் சோதனைகள் ஆகும், இது நோய்களை எதிர்த்துப் போராட உடலால் உருவாகின்றன, ஒரு நபர் முன்பு COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆன்டிபாடிகளின் இருப்பு குறிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு தேவையான நெகடிவ் COVID-19 சோதனை முடிவுகளுக்கு இரண்டு நிலைகள் உள்ளது என்று MOH தெரிவித்துள்ளது, அதாவது போர்டிங் செய்வதற்கு முன்னர் இந்தியாவின் விமான நிலையத்தில் மற்றும் சிங்கப்பூரில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்ட பயணிகள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை செய்யப்படுவார்கள் என்று MOH தெரிவித்துள்ளது.
மேலும், சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு போலி ஆவணங்களை முன்வைப்பவர்கள் எதிர்காலத்தில் நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் 15,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் வேலையிழப்பு..!