இந்தியாவுக்கு சென்ற சிங்கப்பூர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவுக்கு சென்ற சிங்கப்பூர் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!
Photo: Singapore in India

 

 

ஜி20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று (செப்.08) இரவு 10.00 மணிக்கு இந்தியாவின் தலைநகர் டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்- யை இந்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிங்கப்பூரில் 25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம் பெண் மரணம்

பூங்கொத்து கொடுத்தும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடனும், மேள, தாளங்களுடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சர்கள் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இந்திராணி ராஜா, அரசு உயரதிகாரிகள் தங்கியுள்ளனர்.

“சிங்கப்பூர் – சென்னை” செல்லும் மற்றும் வரும் விமான பயணிகள் கடும் அவதி

இன்றும், நாளையும் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துக் கொள்ளும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அமைச்சர்கள் மற்றும் ஜி20 நாடுகளின் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். இந்த சந்திப்பின் போது சிங்கப்பூர்- இந்தியா இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.