சிங்கப்பூரில் காவல்துறையின் காரின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 33 வயதுடைய நபர் குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டு, அவரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு…தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானங்கள்.
நேற்று (நவம்பர் 1) இரவு 11:40 மணிக்கு, Yishun Avenue 1-ல் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் மோதும்போது காவல்துறையின் கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மோதியவுடன் Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும், அப்போது அவர் தெளிவாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பின்னர் அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லிட்டில் இந்தியாவில் உள்ள உணவகத்தின் சமையலறையில் சடலம்.