2028ஆம் ஆண்டுக்குள் இவர்களுக்கு அடிப்படை மாத சம்பளம் S$3,530ஆக அதிகரிக்கும்

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website

தனியார் பாதுகாப்புத் தொழில் ஊழியருக்கான படிப்படியாக அதிகரிக்கும் சம்பள மாதிரி (PWM) மறுஆய்வு குறித்த பாதுகாப்பு முத்தரப்புக் குழுவின் (STC) பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளில் ஒன்று, 2028ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு அதிகாரிகளின் அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் S$3,530ஆக அதிகரிக்க வேண்டும் என்பதாகும்.

சிங்கப்பூர் கடல்சார் துறையில் வேலை வாய்ப்பு!!!

அக்டோபர் 1ஆம் தேதி வரை, சுமார் 40,000 குடியிருப்பாளர்கள் (சிங்கப்பூர் குடிமகன் அல்லது நிரந்தர வாசிகள்) 265 பாதுகாப்பு நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று STC கூறியது.

அடுத்த ஆண்டு 2022க்கு முன்மொழியப்பட்ட 3 சதவீத சம்பள உயர்வைத் தொடர முடிவு செய்துள்ளதாக STC தனது சமீபத்திய பரிந்துரைகளில் கூறியது.

இருப்பினும், 2023 முதல் 2028 வரை, பாதுகாப்பு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவுகள் விநியோகம்