வெளிநாட்டில் இருந்து வந்த அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு தொற்று பாதிப்பு – 155 பேருக்கு “Omicron”

Singapore record highest-imported-cases
Andrew Koay via Mothership

சிங்கப்பூரில் புத்தாண்டு தினம் ஜன.1 ஆம் தேதி நிலவரப்படி, 456 புதிய கோவிட்-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக பதிவுசெய்யப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளில் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் சண்டை: மரப்பலகையால் தாக்கியதில் ஒருவர் மரணம் – சந்தேக நபர் கைது

ஜன. 1 அன்று வெளிநாட்டில் இருந்து வந்த 260 பேர் இதில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், சிங்கப்பூரில் வெளிநாட்டில் இருந்து வந்த பாதிப்புகளில் மிக அதிகம் இது.

மேலும், கோவிட்-19 தொற்றுநோயால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக MOH பதிவிட்டுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட புதிய பாதிப்புகளில், 155 பேருக்கு Omicron பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக MOH கூறியுள்ளது.

புதிய Omicron பாதிப்புகளில், 128 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மற்றும் 27 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பயணிகளுக்கு ஜன. 8 முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எளிமையாக்கும் சிங்கப்பூர்