சிங்கப்பூரில் மேலும் 3,474 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (17/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (17/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 3,474 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 3,464 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 3,320 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 144 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 10 பேருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,44,815 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது.

இலவச ‘வாய் கொப்பளிக்கும்’ திரவத்தைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,468 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இவர்களில் 242 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 112 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த நாளில் 2,555 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 401 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.