COVID-19: சிங்கப்பூரில் மேலும் 35 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு; 16 பேர் குணமடைந்தனர்..!

Singapore reports 35 more COVID-19 cases
Singapore reports 35 more COVID-19 cases

சிங்கப்பூரில் புதிதாக 35 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 30) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 879ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க அதிகாரிகள் கண்காணிப்பு..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 228ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 420 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 9 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதிய சம்பவங்களில், 12 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.

மேலும் 14 புதிய நபர்களுக்கு எதனுடனும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் மூன்று பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் பிரதமர் லீ அனுப்பியதாக வலம்வரும் போலி மின்னஞ்சல்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil