Covid19 Singapore : சிங்கப்பூரில் நண்பகல் (ஆகஸ்ட் 31) நிலவரப்படி, புதிதாக 41 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 56,812ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: Nex மாலின் Shaw திரையரங்கில் மேலிருந்து காற்றோட்டக் குழாய் விழுந்ததில் இருவர் காயம்..!
புதிய சம்பவங்களில், சமூக அளவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதில், அனைவரும் வேலை அனுமதி பெற்றவர்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
!function(e,i,n,s){var t=”InfogramEmbeds”,d=e.getElementsByTagName(“script”)[0];if(window[t]&&window[t].initialized)window[t].process&&window[t].process();else if(!e.getElementById(n)){var o=e.createElement(“script”);o.async=1,o.id=n,o.src=”https://e.infogram.com/js/dist/embed-loader-min.js”,d.parentNode.insertBefore(o,d)}}(document,0,”infogram-async”);
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 7 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிங்கப்பூருக்கு வந்த உடனே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வேலை அனுமதி காலாவதியாகும் வெளிநாட்டு ஊழியர்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பும் முஸ்தஃபா சென்டர்..!
இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.