COVID-19 தொற்று காரணமாக சிங்கப்பூரில் 4வது நபர் மரணம்..!

Singapore reports 4th death from COVID-19, a 68-year-old Indonesian national
Singapore reports 4th death from COVID-19, a 68-year-old Indonesian national

சிங்கப்பூர் COVID-19 காரணமாக நான்காவது மரணம் நிகழ்ந்துள்ளதாக வியாழக்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளது.

இதில் 68 வயதான இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 74 பேர் பாதிப்பு; மொத்தம் 1000ஆக உயர்வு..!

இன்று வியாழக்கிழமை அதிகாலை 6.43 மணியளவில் இந்த நோய் காரணமாக அந்த நபர் இறந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. அவருக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்கனவே இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் சிங்கப்பூர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர் என்றும், ஜனவரி 20 முதல் மார்ச் 16 வரை இந்தோனேசியாவில் இருந்ததாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் 22 அன்று, அவர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) அனுமதிக்கப்பட்டார், அதே நாளில் COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும்,,அவரின் குடும்பத்தினரை அமைச்சகம் தொடர்புகொண்டுள்ளது, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இருவர் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு..!