சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் மேலும் இரண்டு இறப்புகள் பதிவு

Google Maps

சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் மேலும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.

முதலாவது நபர்

முதலாவது நபர், 93 வயதான சிங்கப்பூர் பெண் நேற்று வியாழக்கிழமை இறந்தார் என்று MOH கூறியுள்ளது.

அவர் கிருமித்தொற்று நோய்க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

இதற்கு முன் அவருக்கு, இதய செயலிழப்பு, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்துள்ளது.

சிங்கப்பூரில் 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்த பானாசோனிக் (Panasonic) நிறுவனம்

இரண்டாவது நபர்

இரண்டாவது நபர், 71 வயதான சிங்கப்பூர் பெண் வியாழக்கிழமை நோய் உறுதி செய்யப்பட்டு, அதே நாளில் இறந்தார்.

அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை மற்றும் புற்றுநோயின் பாதிப்பு அவருக்கு இருந்துள்ளது என்றும் MOH கூறியுள்ளது.

துவாஸில் உள்ள ஆலையில் வெடிப்பு: ஒருவர் மரணம் – இருவருக்கு பலத்த காயம்