சிங்கப்பூரில் நேற்று மார்ச் 22 நிலவரப்படி, புதிதாக 13,166 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.
இதில் 12,925 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 241 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர் கைது – இதுபோன்ற தவறிழைக்காமல் எச்சரிக்கையாக இருங்கள்!
உயிரிழப்பு
மேலும் 6 பேர் கிருமி தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,214ஆக உள்ளது.
மருத்துவமனைகளில் உள்ளோர் விவரம்
அதே போல, மருத்துவமனையில் 1,023 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அது தெரிவித்தது.
மேலும், ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 141 பேர் இருப்பதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.
ICU அவசர சிகிச்சை பிரிவில் 24 பேர் உள்ளனர்.
தடுப்பூசி நிலவரம்
சிங்கப்பூரில் தகுதியுடைய 95 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
அதே போல், 71 சதவீத பேர் (மொத்த மக்கள் தொகையில்) பூஸ்டர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக ஊழியர் மீது மனைவி கொடுத்த புகார் – கைது செய்த போலீஸ்!