சிங்கப்பூரில் தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழப்பு – ICU சிகிச்சை பிரிவில் 47 பேர்

TODAY

சிங்கப்பூரில் மார்ச்.,06 நிலவரப்படி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தொற்று தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,078 ஆக உள்ளது எனவும் MOH கூறியுள்ளது.

ஊழியர் பற்றாக்குறை… கட்டுமான, கடல் துறை Work permit ஊழியர்களின் நுழைவு நடைமுறை எளிமை! – செய்ய வேண்டியது என்ன?

மருத்துவமனைகளில் உள்ளோர் விவரம்

அதே போல, மருத்துவமனையில் 1,437 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அது தெரிவித்தது.

மேலும், ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 190 பேர் இருப்பதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

ICU அவசர சிகிச்சை பிரிவில் 47 பேர் உள்ளனர்.

தடுப்பூசி நிலவரம்

சிங்கப்பூரில் தகுதியுடைய 95 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

அதே போல், 69 சதவீத பேர் (மொத்த மக்கள் தொகையில்) பூஸ்டர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!