கல்லாங் சாலை அருகே ரோச்சோர் ஆற்றில் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேற்று (அக்டோபர் 10) காலை 7.10 மணியளவில் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.
கொரோனா: சிங்கப்பூரில் புதிதாக 9 பேர் உயிரிழப்பு – MOH
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இதில் கொலைக்கான சாத்தியம் இல்லை என்று காவல்துறை கூறியுள்ளது.
No.10 கல்லாங் சாலைக்கு அருகில் உள்ள ஆற்றில், சடலம் தண்ணீரில் மிதப்பதை கண்ட சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், பின்னர் உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
அதனை அடுத்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை ஆம்புலன்ஸ் குழுவினர் உறுதி செய்தனர்.
மேலதிக விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண திட்டம் – முன்பதிவுக்காக முடங்கிய விமான இணையதளம்