சிங்கப்பூரில் அதிரடி சோதனை… சந்தேகத்தில் பிடிபட்ட 310 பேர் – போலீசார் விசாரணை

ஹூன் சியான் கெங் கோவில்
Photo: TODAY Online

சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 310 பேர் பிடிபட்டுள்ளனர், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் 16 முதல் 85 வயதுக்கு உட்பட்ட 208 ஆடவர்கள், 102 பெண்கள் என போலீசார் கூறியுள்ளனர்.

பிரபலமான அரிசி வகைகளுக்கு அதிரடி தள்ளுபடி – NTUC FairPrice

இவர்கள் சுமார் 896 க்கும் கூடுதலான மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

இந்த அதிரடி சோதனை கடந்த அக்.14ஆம் தேதி முதல் 27 வரை, வர்த்தக விவகார பிரிவு மற்றும் 7 போலீஸ் நிலப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் S$5.8 மில்லியன் தொகைக்கு மேல் இழந்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இணைய மோசடி, அதிகாரிகளை போல் ஆள்மாறாட்ட மோசடி, பண மோசடி ஆகியவை இந்த மோசடி குற்றங்களில் அடங்கும்.

பெண் என்று போலி கணக்கு தொடங்கி பல பெண்களிடம் அந்தரங்க போட்டோ, வீடியோக்களை குவித்த புலம்பெயர்ந்த ஊழியர் – 40 மாத சிறை