சிங்கப்பூரில் மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தில் 310 பேர் பிடிபட்டுள்ளனர், அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் 16 முதல் 85 வயதுக்கு உட்பட்ட 208 ஆடவர்கள், 102 பெண்கள் என போலீசார் கூறியுள்ளனர்.
பிரபலமான அரிசி வகைகளுக்கு அதிரடி தள்ளுபடி – NTUC FairPrice
இவர்கள் சுமார் 896 க்கும் கூடுதலான மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இந்த அதிரடி சோதனை கடந்த அக்.14ஆம் தேதி முதல் 27 வரை, வர்த்தக விவகார பிரிவு மற்றும் 7 போலீஸ் நிலப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்டது.
இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் S$5.8 மில்லியன் தொகைக்கு மேல் இழந்ததாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
இணைய மோசடி, அதிகாரிகளை போல் ஆள்மாறாட்ட மோசடி, பண மோசடி ஆகியவை இந்த மோசடி குற்றங்களில் அடங்கும்.