சமூகத்தில் பன்முகத்தன்மை அதிகரித்தால் ஒற்றுமையை கட்டிக்காப்பது சிரமமாகலாம்; துணைப்பிரதமர்.!

Singapore sub pm speech
Pic: MCI

சிங்கப்பூரர்கள் தங்கள் கலாசாரத்தை நன்கு புரிந்துகொள்ள அவர்களுக்கு இருமொழித்திறன் உதவியாக இருப்பதாக சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) தெரிவித்துள்ளார்.

டன்மன் உயர்நிலைப் பள்ளியின் 65ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது இதனைக் அவர் கூறினார்.

சிங்கப்பூரர்களுக்கு இருமொழித்திறன் உதவியாக இருப்பதைக் கடந்து, சிங்கப்பூரர்களுக்கான அடையாளத்தையும் மற்றும் இலக்கையும் உருவாக்குவது அவசியம் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் குறிப்பிட்டார்.

விபத்தில் டாக்ஸியின் பின் இருக்கையில் சிக்கிய இருவரை போராடி மீட்ட SCDF வீரர்கள்

வட்டார மொழிகளில் சிறந்து விளங்குவதன் மூலம் சிங்கப்பூரர்களுக்கு ஆசியாவில் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் கூறினார்.

சமூகத்தில் பன்முகத்தன்மை அதிகரித்தால் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது சிரமமாகலாம் என்றும், சிங்கப்பூரில் அண்மையில் நடந்த இனம் சார்ந்த சில சம்பவங்கள் கவனத்தை ஈர்த்ததகாவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த வந்த ஒற்றுமை, எவ்வளவு சுலபத்தில் சிதறிப் போயிருக்கலாம் என்பதை இத்தகைய சம்பவங்கள் நினைவுப்படுத்துவதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.

கொரோனாவில் இருந்து விடுபட்டு வலுவான நாடாக மேம்படுவதில் நாம் வெற்றி காண்­போம்; பிரதமர் திரு லீ.!