சிங்கப்பூரில், 2022 புலி ஆண்டை முன்னிட்டு சிறப்பு நாணயங்கள் அறிமுகம்!! – முன்பதிவு செய்யலாம்

MAS

சிங்கப்பூர் 2022ஆம் ஆண்டுக்கான புலி பொறிக்கப்பட்ட நாணயங்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) வெளியிட்டது.

MAS தகவலின் படி, சிங்கப்பூர் நான்காவது சீன பஞ்சாங்க நாணயத் தொடரின் ஆறாவது பதிப்பு இதுவாகும்.

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை விதிப்பு

இந்த நாணயங்களின் 10 பதிப்புகள் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று வெளியிடப்படும். இது வெவ்வேறு உலோகக் கலவைகள், வடிவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த 2022ஆம் ஆண்டு புலி நாணயங்களில் பின்னணியில் ஹவ் பார் வில்லா (Haw Par Villa) பூங்கா இடம்பெற்றுள்ளது.

கூடுதலாக, ஒவ்வொரு நாணயத்தின் முன்புறமும் சிங்கப்பூர் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னம் இடம்பெற்றுள்ளது.

MAS

நாணய விற்பனை

பல்வேறு நாணய சேர்க்கைகளை உள்ளடக்கிய சிறப்பு பிரீமியம் தொகுப்பு விற்பனைக்கு வரும் என்று MAS தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நாணயச் சாலை (The Singapore Mint) அந்த நாணயங்களை விற்பனைக்கு விடும், வரும் நவம்பர் 18 முதல் டிசம்பர் 17 வரை முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்ய மற்றும் சரிபார்க்க, நீங்கள் இந்த தளத்தைப் பார்வையிடலாம் அல்லது 6566 2626 என்ற எண்ணை அழைக்கலாம்.

அளவுக்கு அதிகமாக முன்பதிவுகள் பெறப்பட்டால், அவர்களுக்கு குலுக்கல் முறையில் நாணயங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழக தென்மாவட்டங்களுக்கும் விமானம் வேண்டும்”…மதுரை-சிங்கப்பூர் இடையே சேவை தொடங்க வலுக்கும் கோரிக்கை