சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 9 பேருக்கு தொற்று – தொடரும் தீவீர சோதனை

இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு பயணம் செய்துவந்த 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருச்சி, சென்னை, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மலேசியா செல்லும் அனைத்து VTL பயணிகளுக்கும் புதிய அப்டேட்

கடந்த டிச. 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் விமான நிலையங்களில், புதிய வகை தொற்று காரணமாக தீவீர சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சமீபத்தில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 67 வயதான நபர் ஒருவருக்கு, சென்னை வந்த ஒரு பயணிக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

புதிய வகை தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் இவர்களின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அதில் யாருக்கும் உறுமாறிய தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுடன் பயணித்த 30 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது சென்னை, திருச்சி, கும்பகோணம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

சாலையை விட்டு விலகி பாதசாரிகளின் நடைபாதையில் சீறிப்பாய்ந்த கார் – இருவர் காயம்