சிங்கப்பூர் 3ஆம் கட்டத்தில் சுற்றுலாத் தலங்களின் வருகை அனுமதி விவரம்!

Singapore tourist Phase3
(PHOTO: Travel DiaryParnashree)

குறிப்பிட்ட 4 சுற்றுலாத் தலங்களுக்கு வருகை அனுமதி எண்ணிக்கையை 50இல் இருந்து 65 சதவீதம் உயர்த்த சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

4 சுற்றுலாத் தலங்கள்:

  • கரையோர பூந்தோட்டம்
  • சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம்
  • நைட் சஃபாரி (Night Safari)
  • ரிவர் சஃபாரி (River safari)

விதிமுறைகளை மீறிய பிரபல பிரியாணி உணவகம் உள்ளிட்ட 16 உணவகங்களுக்கு அபராதம்!

இது சிங்கப்பூரின் 3ஆம் கட்டம் தொடங்கும்போது நடப்புக்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிகள் அங்கு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த, பாதுகாப்பு ஊழியர் எண்ணிக்கையை 3 மடங்கு வரை அதிகரிக்கவிருப்பதாக கரையோர பூந்தோட்டம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், இரவு சஃபாரி ஆகியவற்றில் உச்ச கூட்டம் இருக்கும் நேரங்களில் பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் கூடுதலாக நியமிக்க உள்ளதாக சிங்கப்பூர் வனவிலங்குக் காப்பகம் திட்டமிட்டுள்ளது.

இதில் உடனடியாக வருகையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் ஏதும் இல்லை என்று சிங்கப்பூர் ராட்டினம் தெரிவித்துள்ளது.

தமிழ்ச் சமூகத்தின் அடையாளமான பிரபல கோமள விலாஸ் உணவகத்தின் உரிமையாளர் காலமானார்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…