சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் நேற்று புத்தாண்டு தினத்தில் மட்டும் 6,378 பேர் இந்தியா வந்துள்ளனர்.
வந்தே பாரத் என்னும் சிறப்பு திட்டம் மற்றும் Air bubble திட்டத்தின் கீழ், இந்திய அரசு தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருகிறது.
சிங்கப்பூரில் கனமழை… திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்கு தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஜனவரி 1 புத்தாண்டு அன்று, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 179 பேரும், பெங்களூரு-கொச்சிக்கு 80 பேரும் திரும்பியுள்ளனர்.
Vande Bharat Mission steps into 2021.
Like we have seen since 6 May 2020, stakeholders of India's civil aviation sector will continue with the same zeal, energy & spirit to facilitate repatriation & international travel of stranded citizens.@MoCA_GoI @MEAIndia @MoHFW_INDIA pic.twitter.com/9rFiahgFM8
— Hardeep Singh Puri (@HardeepSPuri) January 1, 2021
இதனை இந்திய விமான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே 6 முதல் சுமார் 43.2 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் சர்வதேச நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் சாலையை கடந்த ஆடவர் மீது லாரி மோதி விபத்து – காணொளி