சிங்கப்பூரில் விநாயகர் சதுர்த்தி நன்னாளை முன்னிட்டு பல கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
புகப்பெற்ற ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் சொல்லிலடங்கா வண்ணம் பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது.
விநாயகர் அருள் பெறவேண்டி காலை முதலே ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஊழியர்கள். இந்து பக்தர்கள் அனைவரும் கடவுளை வழிபட்டு சென்றனர்.
விநாயகர் சன்னதியை 108 முறை வளம் வந்த வெளிநாட்டு ஊழியர்கள் பலர், தங்கள் கஷ்டங்கள் நீங்க வேண்டும் என கடவுளை மனதார பிராத்தித்தனர்.
அதுமட்டுமல்லாமல், சிவன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சுமார் 6000 தேங்காய் கொண்டு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலையும் மற்றொரு சிறப்பு.
அதோடு லிட்டில் இந்தியாவில் விநாயகர் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.
JUSTIN: உட்லண்ட்ஸில் பேருந்து, கார் மோதி கோர விபத்து: இருவர் மரணம் – 8 பேர் மருத்துவனையில் அனுமதி