ஈஸ்ட் கோஸ்ட் பார்க் கடற்கரையில் இன்று செப். 26 காலை நீர் சுழற்சி காணப்பட்டது.
கடற்கரையை சுத்தம் செய்யும் போது இளைஞர்கள் குழுவில் இருந்த சீவ் யான் என்ற பெண் இதனை பகிர்ந்து கொண்டார்.
சிங்கப்பூரில் போலி S$10,000 பண நோட்டை பயன்படுத்தியதாக 3 பேர் கைது
அவர் காலை 10:22 மணிக்கு இந்த நீர் சுழற்சி வானிலை நிகழ்வைக் கண்டதாக கூறியுள்ளார்.
நீர் சுழற்சி பலத்த காற்றுடன் சேர்ந்து தோன்றியதாக கூறப்பட்டுள்ளது. இதில் கடற்கரையிலிருந்து புழுதிகள் கிளம்புவதையும் நாம் காணலாம்.
இது சுமார் ஐந்து நிமிடங்கள் நீடித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது புதிதல்ல, இதற்கு முன்னர் சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீர்ச்சுழற்சி தோன்றியது.