புத்தாண்டில் பிறந்த முதல் மூன்று குழந்தைகளை வரவேற்ற சிங்கப்பூர்!

சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதலான போனஸ் - ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும்
(Photo: Pixabay)

2021ஆம் ஆண்டை வரவேற்ற தருணத்தில் மூன்று மருத்துவமனைகளின், மூன்று தம்பதிகள் தங்கள் பிறந்த குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நள்ளிரவில், ராஃபிள்ஸ் (Raffles) மருத்துவமனை, மவுண்ட் அல்வெர்னியா (Mount Alvernia) மருத்துவமனை மற்றும் மவுண்ட் எலிசபெத் (Mount Elizabeth) நோவெனா மருத்துவமனை மருத்துவர்கள் சிங்கப்பூரின் 2021ஆம் ஆண்டின் முதல் குழந்தைகளை பிரசவித்தனர்.

சிங்கப்பூரில் சாலையை கடந்த ஆடவர் மீது லாரி மோதி விபத்து – காணொளி

ராஃபிள்ஸ் (Raffles) மருத்துவமனையில், ஸெமின் டான் (Zemin Tan), ஆட்ரி தியு (Audrey Tjioe) தம்பதிக்கு இந்த புத்தாண்டின் சிறந்த பரிசாக ஏவரி டான் (Avery Tan) என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதே போல, யு ஹுய் லான் (Yu Hui Lan), டேவிட் சான் (David Chan) தம்பதி தங்களுடைய 2வது குழந்தையை மவுண்ட் அல்வெர்னியா மருத்துவமனையில் பெற்றெடுத்தனர்.

இரண்டு வயது ஆண் பிள்ளையும் இவர்களுக்கு உள்ளது. இந்த தம்பதியினர், புதிதாக பிறந்த மகளின் பெயரை இன்னும் முடிவு செய்யவில்லை.

சிங்கப்பூரின் மூன்றாவது புத்தாண்டு குழந்தை, நள்ளிரவில் மவுண்ட் எலிசபெத் நோவெனா மருத்துவமனையில் பிறந்தது.

சிங்கப்பூரில் கனமழை… திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…