வெளிநாட்டுக்கு சென்ற சிங்கப்பூரர் ஒருவர் சட்டவிரோத பாலியல் சேவையில் ஈடுபட்டதாக பிடிபட்டார்.
தைவானுக்கு வர்த்தகப் பயணமாகச் சென்றிருந்த சிங்கப்பூரர் ஒருவர், கடந்த ஜனவரி 30 அன்று அந்நாட்டு காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் உள்ள கடற்கரைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு – இதனை செய்ய வேண்டாம்
Kaohsiung, Datong 1st சாலையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் ஊழியர்கள் சட்டவிரோதமான பாலியல் சேவைகளை வழங்குவதாக காவல்துறைக்கு புகார் கிடைத்தது.
இதனை அடுத்து, அந்த சலூன் வளாகத்தை சோதனை செய்த காவல்துறை ஏழு பேரை கைது செய்ததாக கூறப்பட்டுள்ளது.
பிடிபட்ட நபர்களின் ஹோ என்று அழைக்கப்படும் 49 வயது சிங்கப்பூரரும் ஒருவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
சோதனை செய்யப்பட்டபோது அவர் 42 வயது பெண் ஒருவருடன் தனியறையில் இருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற இரண்டு வாடிக்கையாளர்கள் உட்பட 40 மற்றும் 53 வயதுமிக்க மூன்று வியட்நாம் பெண் ஊழியர்களும் இதில் கைது செய்யப்பட்டனர்.