மலேசியாவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி சிங்கப்பூர் பெண் ஒருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில், அவர் சென்ற கார் சறுக்கி சாலை தடுப்பில் மோதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை பயணிகளுக்கு நற்செய்தி – காத்திருக்கும் நேரம் குறைப்பு
இந்த விபத்து வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் KM208 மார்க்கரில் இரவு 11.30 மணியளவில் ஏற்பட்டது. இதில் 25 வயதான திருமதி ஹுவாங் கைட்டிங், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
திருமதி ஹுவாங் ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாக Alor Gajah காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
வானத்தில் சென்ற மற்றொரு சிங்கப்பூர் பயணி திரு கென்னத் ஃபோங் ஜெங் யிப் என்பவருக்கு காயம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
கார் ஓட்டுநர் திரு முஹம்மது ஹில்மி அப்துல் ரஹீம், 28, இவரும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர். இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தையில் பேசி, மொபைல் போனை தூக்கி வீசி ரகளை செய்த நபர்