இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூரர்கள் இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும், கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். போராட்டங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களை அவர்கள் தவிர்க்க வேண்டும். அவர்கள் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணித்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.
இந்திய ஊழியர் கண்டெய்னர்களுக்கு இடையே சிக்கி மரணம்: கனரக வாகன ஓட்டுநருக்கு சிறை
இலங்கைக்கு பயணம் செய்யும் சிங்கப்பூரர்கள் விரிவான பயணக் காப்பீட்டை வாங்கவும், விதிமுறைகள் மற்றும் கவரேஜ் பற்றி நன்கு அறிந்திருக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், https://eregister.mfa.gov.sg/ என்ற வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் இ- பதிவு செய்யுமாறு அவர்கள் வலுவாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தூதரக உதவி தேவைப்படுபவர்கள் கொழும்பில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தையோ அல்லது 24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தையோ தொடர்புக் கொள்ளலாம். அதன் விவரங்கள் பின்வருமாறு,
இலங்கை கொழும்புவில் உள்ள துணை தூதரகம்:
நம்பர் 73, சர் ஜேம்ஸ் பீரிஸ் மாவதா (No 73, Sir James Peiris Mawatha),
கொழும்பு 02, இலங்கை,
தொலைபேசி எண்கள்: +94-11-5577300, +94-11-2304444, +94-11-5577111,
மின்னஞ்சல் முகவரி: nawaloka@slt.lk.
24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம்:
டாங்லின், சிங்கப்பூர் 248163 (Tanglin, Singapore 248163),
தொலைபேசி எண்கள்: +65 6379 8800 / 8855,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg.
இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.