“சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருந்து, துணிவுடன் மீண்டும் வெற்றி காண்பார்கள்” – பிரதமர் லீ..!

Singaporeans will stay united and prevail once more - PM Lee
(Photo: MINDEF, MND and WOHA Architects)

அனைவரும் எதிர்நோக்கும் இந்த சிரமங்கள், சிங்கப்பூரர்களை வலுப்படுத்தி ஒரே மக்களாக ஒன்றிணைக்கும் என்று பிரதமர் லீ சியென் லூங் வருடாந்தர தேசிய தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் ஒவ்வொரு தேசிய தினத்தின்போதும் நமது நாட்டின் கதை கொண்டாடப்பட வேண்டிய ஓர் அம்சம் என்பதை திரு. லீ பெருமையுடன் சுட்டி காட்டினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை..!

மேலும், சிங்கப்பூரின் வரலாறு என்பது போற்றத்தக்க ஒன்று என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் தேசிய தினம், COVID-19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் சிங்கப்பூரின் முன்னிலை ஊழியர்களைப் பாராட்டுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளதாகப் பிரதமர் லீ குறிப்பிட்டார்.

முன்னிலை ஊழியர்களில் பலர், தங்களது பெருந்தன்மையான குணத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையும் திரு லீ பெருமையுடன் பகிர்ந்தார்.

“சவால்கள் இருந்தாலும், சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருந்து, துணிவுடன் மீண்டும் வெற்றி காண்பார்கள்”, என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் COVID-19 பரிசோதனை முடிந்தது: MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg