சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஒருவர் உட்பட 6 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதாவது சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவர், எத்தியோப்பியாவில் இருந்து வந்தவர், துபாயில் இருந்து வந்த 4 பேர், மொத்தம் 6 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்கள்…கொலை செய்யப்பட்ட விவசாயி தந்தை – போலீசார் தீவிர விசாரணை
அதோடு கூடுதலாக இவர்களுக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் ஒமைக்ரான் பாதிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த 6 பேருக்கும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவர்களின் ரத்த மாதிரிகள் சென்னை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சோதனை முடிவுகள் மட்டுமே இவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்யும்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை தொற்று காரணமாக 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.