சிங்கப்பூரில் நேற்றைய (மே 13) நிலவரப்படி, புதிதாக 675 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 25,346ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் ஆக அதிகமானோர் COVID-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்..!
புதிய சம்பவங்கள்
புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய சம்பவங்களில் சமூக அளவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 2 சிங்கப்பூரர்கள் அடங்குவர்
வெளிநாடுகளில் இருந்து வந்த சம்பவங்கள் எதுவும் இல்லை, அதே போல் தங்கும் விடுதிகளுக்கு வெளியே வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்களிடையே புதிய சம்பவங்கள் எதுவும் இல்லை.
புதிய குழுமங்கள்
மேலும் 6 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளது
- 3 Kian Teck Crescent
- 119 Neythal Road
- 1 Sungei Kadut Street 4
- 1020 Tai Seng Avenue
- 17C Tuas Road
- 29 Tuas View Walk 2
இதையும் படிங்க : மூன்று பேர் மீது வீட்டில் தங்கும் உத்தரவை மீறியதன் தொடர்பில் குற்றச்சாட்டு..!